செய்திகள்
கைது

தேனி அருகே கொதிக்கும் நீரை ஊற்றி வாலிபரை கொலை செய்தவர் கைது

Published On 2019-08-12 10:35 GMT   |   Update On 2019-08-12 10:35 GMT
தேனி அருகே கொதிக்கும் நீரை ஊற்றி வாலிபரை கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி:

தேனி அருகே உள்ள கோட்டூர் கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 40). கூலித் தொழிலாளி. ஏ.டி. பள்ளி தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 39). இவர்கள் இருவரும் நண்பர்கள். சம்பவத்தன்று ஆடி விருந்துக்காக சென்றனர்.

இருவரும் நன்றாக மது குடித்து விட்டு சாப்பிடச் சென்றனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த ராஜகோபால் சமையலுக்காக தயார் செய்து வைத்திருந்த கொதிக்கும் நீரை கிருஷ்ணமூர்த்தி மீது ஊற்றினார். இதில் அவர் உடல் முழுவதும் வெந்து துடிதுடித்தார்.

வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணமூர்த்தி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணமூர்த்தியின் தாய் பேச்சியம்மாள் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜகோபாலை கைது செய்தனர்.

Tags:    

Similar News