search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killing young man"

    வலுக்கட்டாயமாக வாயில் வி‌ஷம் ஊற்றி வாலிபரை கொலை செய்ததாக கள்ளக் காதலி உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் சின்ன முனியாண்டி (வயது42). இவருக்கு ராக்கம்மாள் என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    சின்ன முனியாண்டி கோவில்பட்டியில் உள்ள துடைப்பம் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் வில்லூரைச் சேர்ந்த மீனா (22) என்பவரும் வேலை பார்த்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீனா பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் சின்ன முனியாண்டிக்கும், மீனாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை உறவினர்கள் கண்டித்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்து வைத்தனர். மேலும் சின்ன முனியாண்டியிடம், மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தினர்.

    போலீசில் புகார் செய்யப்பட்டதால் மீனா ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சின்ன முனியாண்டி சிவகாசி சென்று விட்டு ஊருக்கு பஸ்சில் வந்தார். கண்டியத்தேவன்பட்டியில் இறங்கிய அவர் அங்கிருந்து வில்லூருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு காரில் வந்த மர்ம கும்பல் சின்ன முனியாண்டியை காரில் கடத்தியது. பின்னர் வலுக்கட்டாயமாக சின்ன முனியாண்டி வாயில் அந்த கும்பல் வி‌ஷத்தை ஊற்றிவிட்டு தப்பியது.

    இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சின்ன முனியாண்டி, வில்லூர் சுடுகாடு அருகே மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து அவரது மனைவி ராக்கம்மாள், வில்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் மீனா, அவரது அண்ணன் காளியப்பன், காளிமுத்து, ராஜா, ஜோதிமணி, பாறைபாண்டி, பாண்டியம்மாள், சின்ன முனியம்மாள், தாஸ் ஆகியோர் தான் கொலை செய்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் 9 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×