தஞ்சையில் கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
தஞ்சாவூர்:
தஞ்சை வடக்கு வாசலை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் டீக்கடை நடத்தி வந்தார்.வறுமை காரணமாக மணிகண்டன் பல இடங்களில் கடன் வாங்கியதாக தெரிகிறது.
இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் கொடுத்த பணத்தை மணிகண்டனிடம் கேட்டனர். ஆனால் அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மணிகண்டன் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.