செய்திகள்
ஒட்டன்சத்திரம் அருகே முயல் வேட்டையாடிய 4 பேர் கைது
ஒட்டன்சத்திரம் வடகாடு வனப்பகுதியில் முயலை வேட்டையாடிய 4 பேர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் திவ்யா உத்தரவுக்கு இணங்க வனச்சரகர் செந்தில் குமார் தலைமையில் வனவர் அறிவழகன் வனக் காப்பாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட வனத்துறையினர் பரப்பலாறு அணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் 4 பேர் நின்றிருந்தனர்.
அவர்களை விசாரித்ததில் சத்திரப்பட்டி புதுக்கோட்டையை சேர்ந்த ராமகிருஷ்ணன்(வயது 45), புலியூர் நத்தம் செல்வராஜ் (36), வடகாடு கார்த்திகைவேல்(35), வண்டிப்பாதை சேகர் (25) என்பதும், அவர்கள் 4 பேரும் முயல்களை வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களைக் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்த துப்பாக்கி , தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட முயல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் திவ்யா உத்தரவுக்கு இணங்க வனச்சரகர் செந்தில் குமார் தலைமையில் வனவர் அறிவழகன் வனக் காப்பாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட வனத்துறையினர் பரப்பலாறு அணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் 4 பேர் நின்றிருந்தனர்.
அவர்களை விசாரித்ததில் சத்திரப்பட்டி புதுக்கோட்டையை சேர்ந்த ராமகிருஷ்ணன்(வயது 45), புலியூர் நத்தம் செல்வராஜ் (36), வடகாடு கார்த்திகைவேல்(35), வண்டிப்பாதை சேகர் (25) என்பதும், அவர்கள் 4 பேரும் முயல்களை வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களைக் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்த துப்பாக்கி , தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட முயல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.