செய்திகள்
முதல்-அமைச்சரை சந்திக்கும் எண்ணம் இல்லை- மணிகண்டன்
முதல்-அமைச்சரை சந்திக்கும் எண்ணம் இல்லை என்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மணிகண்டன் கூறினார்.
மதுரை:
தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மண்கண்டனை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென்று நீக்கினார்.
இன்று காலை அவர் சென்னை செல்வதற்காக வீட்டில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு புறப்பட்டார். அப்போது நிருபர்கள், “உங்கள் பதவி நீக்கம் தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்து பேசுவீர்களா?” என்று கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், தற்போது முதல்-அமைச்சரை சந்திக்கும் எண்ணம் இல்லை என்றார்.
தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மண்கண்டனை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென்று நீக்கினார்.
பதவி நீக்கத்தின்போது ராமநாதபுரத்தில் இருந்த மணிகண்டன், அதன் பின்னர் நேற்று இரவு மதுரை வந்து தங்கினார்.
இன்று காலை அவர் சென்னை செல்வதற்காக வீட்டில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு புறப்பட்டார். அப்போது நிருபர்கள், “உங்கள் பதவி நீக்கம் தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்து பேசுவீர்களா?” என்று கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், தற்போது முதல்-அமைச்சரை சந்திக்கும் எண்ணம் இல்லை என்றார்.