செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி

திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2019-08-07 17:29 GMT   |   Update On 2019-08-07 17:29 GMT
திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:

காஷ்மீருக்கான 370 பிரிவை நீக்கியதை கண்டித்தும், தேசிய புலனாய்வு சட்டம், முத்தலாக் சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், தேசிய மருத்துவ கவுன்சில் சட்டம், தொழிலாளர் சட்டங்கள், அணைகள் பாதுகாப்பு சட்டம், மோட்டார் வாகன சட்டம், சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் ஆகியவற்றை திருத்தம் செய்வதை கண்டித்து திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகரம் மற்றும் தெற்கு ஒன்றியக்குழுக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ரகுராமன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு பேசினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 
Tags:    

Similar News