செய்திகள்
மரணம்

குடும்ப தகராறில் தீக்குளித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பலி

Published On 2019-08-07 10:20 GMT   |   Update On 2019-08-07 10:20 GMT
குடும்ப தகராறில் தீக்குளித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை அடுத்துள்ள பிக்கிலிபெரியூர் பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது24).

கணவன்-மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி கடந்த 1-ந்தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்தார்.

இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக முத்து லட்சுமி உயிரிழந்தார். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

தீக்குளித்து தற்கொலை செய்து இறந்த முத்துலட்சுமி சம்பவம் குறித்து தருமபுரி ஆர்.டி.ஒ. சிவன்அருள் விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News