செய்திகள்
தாக்குதல்

போடி அருகே சொத்து பிரச்சினையில் பெண் மீது தாக்குதல்

Published On 2019-08-06 11:18 GMT   |   Update On 2019-08-06 11:18 GMT
போடி அருகே சொத்து பிரச்சினையில் பெண் தாக்கப்பட்டார்.

மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே ஜே.கே.பட்டியை சேர்ந்தவர் முருகன் மனைவி அழகுதாய் (வயது55). இவருக்கும் உறவினர் அழகர்சாமிக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பு அழகுதாய்க்கு சாதகமாக வந்துள்ளது. இதனால் அழகர்சாமி மற்றும் அவரது மனைவி ராணி ஆத்திரத்தில் இருந்தனர்.

சம்பவத்தன்று அழகுத்தாய் வீட்டிற்கு சென்ற 2 பேரும் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். படுகாயம் அடைந்த அழகுத்தாய் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News