செய்திகள்
கைது

மத்தூர் அருகே மாமியாரை தாக்கிய மருமகள் உள்பட 3 பேர் கைது

Published On 2019-08-04 14:09 GMT   |   Update On 2019-08-04 14:09 GMT
மத்தூர் அருகே குடும்ப தகராறில் மாமியாரை தாக்கிய மருமகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கமலா புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி ரோஸ் (வயது60). இவரது மகன் சம்பத். இவருக்கு திருமணமாகி வள்ளி என்ற மனைவி உள்ளார். 

இந்த நிலையில் வள்ளிக்கும், சம்பத்தின் தாயார் ரோஸ்க்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று மீண்டும் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே  தகராறு நடந்தது.

இதனால் மனமுடைந்த வள்ளி தனது தந்தை ராஜா, சகோதரர் ராமச்சந்திரன் ஆகியோர் சேர்ந்து ரோசை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இதில் படுகாயமடைந்த ரோசை மீட்டு சிகிச்சைக்காக அக்கம் பக்கத்தினர் மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த மத்தூர் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து பெண்ணை தாக்கியதாக வள்ளி, ராஜா மற்றும் ராமச்சந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தார்.
Tags:    

Similar News