செய்திகள்
கொள்ளை

திருவட்டார் அருகே கடையின் பூட்டை உடைத்து ரப்பர் ஷீட்-பணம் கொள்ளை

Published On 2019-08-03 12:04 GMT   |   Update On 2019-08-03 12:04 GMT
திருவட்டார் அருகே கடையின் பூட்டை உடைத்து ரப்பர் ஷீட் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

திருவட்டார்:

திருவட்டாரை அடுத்த புலியிறங்கி பகுதியைச் சேர்ந்தவர் டைட்டஸ் (வயது 61). இவர், புலியிறங்கி சந்திப்பில் ரப்பர் ஷீட்டுக்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். சம்பவத் தன்று இரவு வியாபாரம் முடிந்த பின்பு கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.சப்- இன்ஸ்பெக்டர் அருளப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த மேஜையை உடைத்து அதில் இருந்த ரொக்கப்பணம் ரூ.15 ஆயிரம் மற்றும் 80 கிலோ ரப்பர் ஷீட்டுக்களையும் கொள்ளையடித்து சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு, மேஜை ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா எதுவும் உள்ளதா? எனவும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கொள்ளை நடந்த கடையின் அருகே சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்தவர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News