செய்திகள்
கைது

தேனி அருகே போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் கைது

Published On 2019-08-03 09:31 GMT   |   Update On 2019-08-03 09:31 GMT
தேனி அருகே போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி:

தேனி அருகே சின்ன மனூர்- உத்தமபாளையம் சாலையில் முத்துலாபுரம் பிரிவு பகுதியில் சின்னமனூர் சப்-இன்ஸ் பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் மது பாட்டில்கள் மற்றும் பணம் வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து பைக்கில் வந்த சின்னசாமி மற்றும் மூக்கையா ஆகியோரிடம் போலீசார் விசாரித்தபோது அவர்கள் அவதூறாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் 2 பேரையும் கைது செய்து 60 மதுபாட்டில்கள், பணம் ரூ.37,420-யை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News