செய்திகள்
மரணம்

தருமபுரியில் பெண் மர்ம மரணம்- தாய் புகார்

Published On 2019-08-01 13:34 GMT   |   Update On 2019-08-01 13:34 GMT
தருமபுரியில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி:

தருமபுரியை அடுத்துள்ள நரசையர்குளம் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள். இவரது மகள் பிரீத்தி (வயது23). இவருக்கும், அதியமான்கோட்டையை சேர்ந்த ஹரிதாஸ் என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகனும், 1 1/2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தற்போது ஹரிதாஸ் குடும்பத்துடன் நரசையர்குளம் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. நேற்று காலை வீட்டில் பிரீத்தி தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து உடனே ஹரிதாஸ் தனது மாமியாருக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து தனது மகள் உடலை பார்த்து கதறி அழுதார். 

இது குறித்து தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த பிரீத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பழனியம்மாள் டவுன் போலீசில் தனது மகள் பிரீத்தியின் சாவில் சந்தேகம் இருக்கிறது என்று புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News