செய்திகள்
தபால் துறை

ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்.15-ல் நடைபெறுகிறது

Published On 2019-07-31 04:17 GMT   |   Update On 2019-07-31 07:32 GMT
ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என தபால்துறை அறிவித்துள்ளது.
சென்னை:

தபால் துறை சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வில் உள்ள கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

குறிப்பாக தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் இந்த நடைமுறையை கடுமையாக எதிர்த்தன. பாராளுமன்றத்திலும் இப்பிரச்சனை எதிரொலித்தது.

இதையடுத்து, தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படும் என்று பாராளுமன்றத்தில்  மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். 

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி நடைபெறும் என தபால் துறை அறிவித்துள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் அல்லது அம்மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News