செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே விவசாயி படுகொலை - போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி அருகே விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள வட்டிகானப்பள்ளி பகுதியில் முத்தம்மாள் என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது. அங்கு அவருக்கு சொந்தமான கிணற்றில் நேற்று மாலை ஒருவர் பிணமாக கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு கூடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து கங்கலேரி பகுதி கிராம நிர்வாக அலுவலர் ரிஸ்வந்தியன் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த ரிஸ்வந்தியன், கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார், கிணற்றில் கிடந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள வட்டிகானப்பள்ளி பகுதியில் முத்தம்மாள் என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது. அங்கு அவருக்கு சொந்தமான கிணற்றில் நேற்று மாலை ஒருவர் பிணமாக கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு கூடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து கங்கலேரி பகுதி கிராம நிர்வாக அலுவலர் ரிஸ்வந்தியன் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த ரிஸ்வந்தியன், கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார், கிணற்றில் கிடந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, உயிரிழந்தவர், கங்கலேரி அருகே உள்ள பூதிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ராமன்(42) என்பதும், விவசாயியான இவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து அந்த கிணற்றில் உடலை வீசி சென்றதும் தெரியவந்தது. ராமன் உடலைப் பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், ராமனை படுகொலை செய்து கிணற்றில் வீசி சென்ற குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
ராமன், பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில், கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது ஏதாவது பெண் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.