செய்திகள்
காஞ்சீபுரத்தில் இடியுடன் மழை: டெலிவிஷன் செட்டாப் பாக்ஸ்கள் பாதிப்பு
காஞ்சீபுரத்தில் இடியுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் டெலிவிஷன் செட்டாப் பாக்ஸ்கள் பாதிப்புக்குள்ளாகின.
சென்னை:
காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை செய்தது.
பலத்த இடி மின்னலால் காஞ்சீபுரம் - திருவள்ளூர் பகுதியில் ஆயிரக்கணக்கான டெலிவிஷன் செட்டாப் பாக்ஸ்கள் மின்னணு சாதனங்கள், பிரிட்ஜ்கள், பாதிப்புக்குள்ளாகின. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.