செய்திகள்
மழை

காஞ்சீபுரத்தில் இடியுடன் மழை: டெலிவி‌ஷன் செட்டாப் பாக்ஸ்கள் பாதிப்பு

Published On 2019-07-25 10:12 GMT   |   Update On 2019-07-25 10:12 GMT
காஞ்சீபுரத்தில் இடியுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் டெலிவி‌ஷன் செட்டாப் பாக்ஸ்கள் பாதிப்புக்குள்ளாகின.

சென்னை:

காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை செய்தது. 

பலத்த இடி மின்னலால் காஞ்சீபுரம் - திருவள்ளூர் பகுதியில் ஆயிரக்கணக்கான டெலிவி‌ஷன் செட்டாப் பாக்ஸ்கள் மின்னணு சாதனங்கள், பிரிட்ஜ்கள், பாதிப்புக்குள்ளாகின. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News