search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thunder rain"

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதில் 20 டி.வி.க்கள் சேதம் அடைந்தன.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 1-ந் தேதி இரவு கன மழை பெய்தது. மழையுடன் பலத்த இடி, மின்னலும் ஏற்பட்டது. குறிப்பாக இடி, மின்னலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பலமணி நேரம் மஞ்சூர் சுற்றுப்புறங்கள் இருளில் மூழ்கியது.

    மேலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் இடியால் புகைந்து போனது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கன மழையால் அப்பர்பவானி, கோரகுந்தா, கிண்ணக்கொரை, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் விழுந்ததுடன் மண் சரிவுகளும் ஏற்பட்டது.

    ×