செய்திகள்
வேப்பனப்பள்ளியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது
வேப்பனப்பள்ளி அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த பெண்ணை பிடித்து போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வேப்பனப்பள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) கணேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள திம்மராயசுவாமி கோவில் அருகே சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்றிருந்த பெண்னை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் அதே பகுதியை சேர்ந்த மல்லப்பா மனைவி ஜெயம்மா (60) என்பதும் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து, அவரை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்த 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.