செய்திகள்
மணல் கடத்தல்

ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்திய 4 பேர் கைது

Published On 2019-07-24 09:36 GMT   |   Update On 2019-07-24 09:36 GMT
ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு குளத்துப்பகுதியில் அதிகளவு மணல் கடத்தல் நடைபெறுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் அலைந்து திரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வைகை அணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது டிப்பர் லாரியில் மணல் திருடிக்கொண்டிருந்த பிராதுகாரன்பட்டியை சேர்ந்த ராஜபிரபு என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

மாட்டுவண்டி

இதேபோல் சீலையபட்டி நாட்டாமை ஆபிஸ் பின்புறம் அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் அள்ளிய மகேஷ், முத்துராஜா ஆகியோரை கைது செய்து மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர்.

கடமலைக்குண்டு வைகையாற்றுப்படுகையில் மணல் அள்ளிய செல்வம் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 மூடை மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

 

 

Tags:    

Similar News