செய்திகள்
கைது

மாதவரத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேர் கைது

Published On 2019-07-24 08:53 GMT   |   Update On 2019-07-24 08:53 GMT
மாதவரத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாதவரம்:

மாதவரத்தை அடுத்த மாத்தூர், எம்.எம்.டி.ஏ. 16-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். கடந்த 16-ந்தேதி இரவு வீட்டில் நிறுத்ததப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதையடுத்து மாதவரம் பால்பண்ணை போலீசார் வீட்டின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளை 4 பேர் திருடி செல்வது பதிவாகி இருந்தது.

இதனை வைத்து பெரிய மாத்தூரைச் சேர்ந்த நந்தகுமார், சென்னையைச் சேர்ந்த சாய்ராம், பூமா ஆதித்யன் என்கிற தம்பா மற்றும் சிறுவன் ஒருவன் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News