search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதவரம்"

    மாதவரம்- சிறுசேரி 2-வது கட்ட மெட்ரோ ரெயில் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் தனியாருக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. #MetroTrain

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர் மட்ட பாதையிலும், திருங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- வண்ணாரப்பேட்டை வரை சுரங்கபாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள் பொது மக்கள் வரவேற்பை தொடர்ந்து 2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரி 52 கி.மீட்டர் வழித்தட பாதை திட்டப்பணிகள் ரூ.69,180 கோடியில் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படுகிறது. 2026-ம் ஆண்டுக்குள் இப்பணிகள் நிறைவடையும், வட சென்னை- தென் சென்னை பகுதிகளை இணைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் சேவை நடைபெற உள்ளது.

    2-வது கட்ட மெட்ரோ ரெயில் இயக்கம், மற்றும் பராமரிப்பு பணிகள் தனியாருக்கு விட மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 2-வது கட்டமாக உருவாக்கப்படும் மெட்ரோ ரெயில் நிலையங்கள் பராமரிப்பு, இயக்க பணிகள் அனைத்தும் தனியார் ஊழியர்கள் நிர்வகிக்கிறார்கள். மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் தனியார் மூலம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல சென்னை மெட்ரோ 2-வது கட்ட வழித்தட பாதை ரெயில் நிலையங்களும் தனியார் பராமரிப்பு பணிக்கு விடப்படுகிறது. இதன் மூலம் கூடுதல் செலவுகள் குறைக்கப்படுகிறது.

    மாதவரத்தில் பதுங்கி இருந்த கூலிப்படை ரவுடிகள் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை மாதவரம் பகுதியில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கூலிப்படை ரவுடிகள் 6 பேர் பதுங்கி இருந்தனர்.

    இவர்களை பிடிக்க அரியானா மாநில போலீஸ் டி.ஐ.ஜி. சதீஷ்பாலியான் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை வந்தனர். மாதவரம் பகுதியில் கூலிப்படை கும்பல் பதுங்கி இருந்த இடத்தை நேற்று இரவு முற்றுகையிட்டனர். அப்போது மாதவரம் போலீசாரும் பாதுகாப்புக்காக சென்றனர்.

    பின்னர் துப்பாக்கிமுனையில் ரவுடிகளை மடக்கி பிடித்து கைது செய்தனர். அரியானாவைச் சேர்ந்த சுபாஷ், மதன்சர்மா, அனில், சந்தீப், ராகுல்சிங், சுமித் ஆகிய 6 பேர் பிடிபட்டனர்.

    இவர்கள் அனைவரையும், சென்னையில் இருந்து அரியானா மாநிலத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அரியானா கூலிப்படைக்கு சென்னையைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் தான் அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கூலிப்படை கும்பல் அரியானாவில் இருந்து சென்னை வந்தது எப்படி? என்பது பற்றி மாதவரம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாதவரத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாதவரம்:

    மாதவரம் பால் பண்ணை சி.கே.எம். காலனியைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி சரளா. ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்.

    கணவன்-மனைவி இருவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் கேரளா சென்றனர். இந்த நிலையில் அவர்களது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரும் மாயமாகி இருந்தது.

    சந்தேகம் அடைந்த அவர்களது உறவினர் மாதவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

    பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போய் இருந்தன. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் நகை- பணத்தை கொள்ளையடித்து காரையும் திருடி சென்றிருப்பது தெரிந்தது.

    போலீஸ் விசாரணையில் கொள்ளையர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றதும், அங்கு இருந்த சாவியை எடுத்து நகை-பணத்தை திருடியதும், வீட்டின் முன்பு நின்ற காரை திருடி சென்றதும் தெரியவந்தது.

    மாதவரம் மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. #ChennaiMetroTrain


    உலகத்தரம் வாய்ந்த நகர்புறப் பொதுப்போக்கு வரத்து சேவையை சென்னை மாநகரில், சென்னை மெட்ரோ ரெயில் உருவாக்கி உள்ளது.

    2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் முதற் கட்டத்திட்டத்தின் அனைத்து வழித்தடங்களிலும் சேவைகள் முழுமையாக இயக்கப்படும்.

    சுமார் 3,770 கோடி ரூபாய் செலவில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலான முதற்கட்ட விரிவாக்க திட்டச்சேவைகள். 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் திட்டமிட்டபடி துவங்கப்படும்.

    மூன்று வழித்தடங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தினை, 107,55 கிலோ மீட்டர் நீளத்திற்கு செயல்படுத்துவதற்கு மாநில அரசு ஏற்கனவே கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கி உள்ளது.

    ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையானது 20,196 கோடி ரூபாய் நிதிஉதவியினை, 52 கிலோ மீட்டர் நீளத்திற்கான மாதவரம்- சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம்- சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரையிலான முன்னுரிமை வழித்தடப்பகுதிகளுக்கு தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளது.

    ஏறத்தாழ 4,770 கோடி ரூபாய்க்கான முதல் தவணைக்கான கடன் ஒப்பந்தம் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் நாளன்று கையொப்பமிடப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    ஒருங்கிணைக்கப்பட்ட பன்முகப் போக்குவரத்து அமைப்பை செயல்பாட்டிற்கு கொண்டு வரும்முயற்சியாக, சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழுமச் சட்டம் மற்றும் அதற்கான சட்ட விதிகள், 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் நாளன்று அறிவிக்கை செய்யப்படும்.

    மாதவரத்தில் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #StudentSuicide
    மாதவரம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகள் செண்பகவள்ளி (வயது18). இவர் மாதவரத்தில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை செண்பகவள்ளி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று உடன் தங்கி இருக்கும் மாணவிகளிடம் தெரிவித்தார். மேலும் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை.

    இந்தநிலையில் கல்லூரி முடிந்து மாணவிகள் திரும்பி வந்தபோது விடுதி அறையில் செண்பகவள்ளி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    இதனையடுத்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறி கூச்சலிட்டனர். இதுபற்றி மாதவரம் பால்பண்ணை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செண்பகவள்ளியின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? கல்லூரியில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். அவருடன் தங்கி இருந்த மாணவிகளிடமும் விசாரணை நடக்கிறது.

    செண்பகவள்ளி சிறுவயதிலேயே தாயை இழந்தவர். தந்தை முத்து கிருஷ்ணனின் ஆசைப்படி அவர் விவசாயம் தொடர்பான படிப்பை படித்தார். படிப்பில் அவர் ஆர்வமுடன் இருந்ததாக தெரிகிறது.

    தற்கொலை செய்வதற்கு முன்பு செண்பகவள்ளி தோழிகளிடம் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் அறையில் ஓய்வு எடுப்பதாக கூறி இருந்தார். அவர்கள் கல்லூரி முடிந்து திரும்பி வருவதற்குள் செண்பக வள்ளி தற்கொலை செய்து விட்டார்.

    கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #StudentSuicide
    மாதவரம்- சிறுசேரி மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்குகிறது. இதற்காக 800 வீடுகள், 162 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. #Metrotrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    முதல்கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள், பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

    டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை வரையிலான பணிகள் நிறைவு பெற்றதையொட்டி வருகிற ஜனவரியில் மெட்ரோ ரெயில் பயணிகள் போக்குவரத்து சேவை தொடங்கப்படுகிறது.

    2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரி வரை 108 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் ரூ. 80 ஆயிரம் கோடி செலவில் தொடங்க திட்டமிடப்பட்டது.

    இந்த வழித்தட்டத்தில் 116 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. ஜப்பான் நாட்டு நிதி உதவி மூலம் இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்துக்கு மத்திய நகர்புற வளர்ச்சி துறை ஒப்புதல் வழங்கி உள்ளது.

    மாதவரம் - சிறுசேரி மெட்ரோ ரெயில் பணிக்காக 800 வீடு-நிலங்கள் கையகப்படுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 162 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகளில் மெட்ரோ நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    எனவே மாதவரம்- சிறுசேரி மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.

    டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை வரையிலான சுரங்கப் பாதையில் நடைபெற்று வரும் இறுதிகட்ட கட்டுமானப் பணிகள் முன்னேற்றம் குறித்தும் கேட்டு அறிந்ததார். அனைத்து பணிகளையும் விரைவில் முடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் கட்டம்-1 நீட்டிப்பு பணியான வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை நடந்து வரும் கட்டுமான பணி குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண் இயக்குனர் பங்கஜ்குமார் பன்சல், இயக்குநர் (திட்டம்) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். #Metrotrain
    சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக சோழவரம் மற்றும் மாதவரத்தில் 12 செமீ மழை பெய்துள்ளது. #TNRains #NEMonsoon
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. உள் மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் மற்றும் கனமழையால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ள நிலையில்,  தற்போது தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டு வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கிறது.


    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் மற்றும் மாதவரத்தில் 12 செமீ மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர், திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸ் பகுதியில் 11 செமீ மழையும், பொன்னேரியில் 10 செமீ மழையும் பதிவாகி உள்ளது.

    சென்னை வடக்கு, டிஜிபி அலுவலகம், மரக்காணம், திண்டிவனம் மற்றும் பண்ருட்டியில் 9 செமீ, தாமரைப்பாக்கம், நெய்வேலியில் தலா 8 செமீ மழை பெய்துள்ளது. #TNRains #NEMonsoon
    கோயம்பேட்டில் இருந்து மாதவரம் பஸ் நிலையத்துக்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் கடும் அவதியடைந்து உள்ளனர். #madhavaramnewbusstand

    சென்னை:

    கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அதை குறைக்க மாதவரத்தில் நவீன அடுக்கு மாடி பஸ் நிலையம் கட்டப்பட்டது.

    இங்கிருந்து ஆந்திர மாநிலம், திருப்பதி, காளகஸ்தி, நெல்லூர், ஐதராபாத் போன்ற நகரங்களுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த 468 பஸ்கள் மாதவரம் அடுக்கு மாடி பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.

    ரூ.95 கோடி செலவில் கட்டப்பட்ட மாதவரம் அடுக்குமாடி பஸ் நிலையம் கடந்த 10-ந்தேதி திறக்கப்பட்டது.

    ஆந்திரா மாநிலத்துக்கு செல்ல கூடிய பயணிகள் மாதவரம் புதிய பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மாதவரம் அடுக்குமாடி பஸ் நிலையத்துக்கு ஒரே ஒரு மாநகர பஸ் மட்டுமே செல்வதால் அவதியடைந்து உள்ளதாக பயணிகள் கூறுகின்றனர்.

    சென்னை மாநகரில் இருந்து மாதவரம் புதிய பஸ் நிலையத்துக்கு இரண்டு பஸ்கள் மாற வேண்டியது உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

    இது தொடர்பாக பயணிகள் கூறும் போது, மாதவரத்தில் இருந்து திருப்பதிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் சென்னை நகருக்குள் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் வசிப்பவர்கள். கோயம்பேட்டில் இருந்து மாதவரத்துக்கு செல்பவர்கள். ஆனால் கோயம்பேட்டில் இருந்து மாதவரம் புதிய பஸ் நிலையத்துக்கு ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.

    கோயம்பேட்டில் இருந்து 170ஏ, 121 ஆகிய எண்கள் கொண்ட பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையம் அருகே செல்கின்றன.

    114 எண் மாநகர பஸ் மாதவரம் பஸ் நிலையத்துக்கு எதிரே சென்னை- தடா தேசிய நெடுஞ்சாலையில் நிற்கிறது. அதிலிருந்து பயணிகள் இஎஸ்சி சாலையை கடந்து பஸ் நிலையத்துக்குள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது என்றனர்.

    குரோம்பேட்டையை சேர்ந்த பயணி ஒருவர் கூறும் போது, குடும்பத்துடன் திருப்பதிக்கு செல்ல புறப்பட்ட போது மாதவரம் பஸ் நிலையத்துக்கு சென்றடைய இரண்டு பஸ்கள் மாறினோம். ஆனால் நேரடியாக மாநகர பஸ்களை இயக்கினால் டிக்கெட் கட்டணம் இதை விட குறைவாக இருக்கும் பயணமும் எளிதாக இருக்கும் என்றார்.

    மாதவரம் அடுக்குமாடி பஸ் நிலையம் திறக்கப்பட்டதால் பயணிகள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அங்கு சென்னை நகரில் இருந்து செல்ல போதுமான மாநகர பஸ்கள் இல்லாததால் பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.

    இது பற்றி போக்குவரத்து கழக வட்டாரங்கள் கூறும் போது, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாதவரம் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் இயக்குவது கடினமான ஒன்று. ஏனென்றால் கோயம்பேட்டில் இருந்து போதுமான பஸ்கள் இயக்கப்படுகிறது.

    கோயம்பேட்டுக்கு வந்து நகரில் எந்த பகுதிக்கும் பயணிகள் செல்லலாம் என்றார்.

    மாதவரம் புதிய பஸ் நிலையம் தொடங்கப்பட்ட நிலையிலும் கோயம்பேட்டில் இருந்து பஸ்களை இயக்கி வருவதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

    மாதவரம், அக்.19-

    சென்னை கோயம்பேடு புறநகர் பஸ்நிலையம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பஸ்கள் அங்கு வருவதால் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வெளியூர்களுக்கு குறித்த நேரத்தில் பஸ்கள் செல்ல முடியவில்லை. குறிப்பாக பண்டிகை காலங்களில் சிறப்பு பஸ்களை கையாள்வதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    கோயம்பேட்டில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க மாதவரத்தில் புதியதாக புறநகர் பஸ்நிலையம் கடந்த 10-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த புதிய புறநகர் பஸ்நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    திருப்பதி, நெல்லூர், காளகஸ்தி, சத்தியவேடு, மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு பஸ்கள் புறப்பட்டு செல்லும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக 238 தமிழக அரசு பஸ்கள், 25 தனியார் பஸ்கள் மேலும் 205 ஆந்திர மாநில அரசு பேருந்துகள் என மொத்தம் 468 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பஸ்கள் அனைத்தும் மாதவரம் புதிய புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து இனி இயக்கப்படும் என அறிவித்தும் இதுவரையில் முழுமையாக செயல்பட வில்லை. ஒருசில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்களும், ஆந்திர மாநில பஸ்களும் முற்றிலும் இயக்கப் படவில்லை. இதனால் பயணிகள் கூட்டமின்றி எப்போதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஆயுத பூஜை, விஜய தசமியையொட்டி 4 நாட்கள் அரசு தொடர் விடுமுறையாகும். அதனால் கடந்த புதன்கிழமை அன்றே வெளியூர் செல்லும் பஸ்கள் எல்லாம் நிரம்பி வழிந்தது.

    அன்றைய நாளில் கூட மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் முழுமையாக இயக்கப்பட வில்லை. பயணிகள் கோயம்பேட்டில் இருந்துதான் புறப்பட்டு சென்றனர்.

    புதிய பஸ்நிலையம் தொடங்கப்பட்ட நிலையிலும் கோயம்பேட்டில் இருந்து பஸ்களை இயக்கி வருவதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். புதிய பஸ்நிலையம் தொடங்கியது முதல் இனி ஆந்திர மார்க்க பஸ்கள் அங்கிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் பெயர் அளவிற்கு மட்டுமே ஒருசில பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மாதவரம் புதிய பஸ்நிலையம் களை இழந்து காணப்படுகின்றன.

    பண்டிகை காலங்களில் ஏற்படும் நெரிசலை குறைக்கத்தான் புதிய பேருந்து நிலையம் கட்டி திறக்கப்பட்டாலும் அதனை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டுவராமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

    தினமும் 468 பஸ்களை மாதவரத்தில் இருந்து இயக்கினால்தான் மக்களுக்கு இந்த தகவல் முழுமையாக தெரியவரும். அவர்கள் தானாக அந்த இடத்திற்கு சென்று விடுவார்கள். ஆனால் அந்த நடவடிக்கையை எடுக்காமல் தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து இயக்கி வருகின்றனர்.

    மேலும் மாநகர பஸ்களும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் இதுவரையில் பஸ்நிலையத்திற்குள் எந்த பஸ்சும் வரவில்லை. இணைப்பு மாநகர பஸ்கள் மட்டும் பஸ்நிலையத்திற்கு வெளியே நின்று செல்கின்றன. பஸ்கள் முழுமையாக இயக்கப்படாததால் பயணிகளும் வருவதில்லை.

    இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புதிய புறநகர் பஸ்நிலையத்தில் இருந்து இன்று முதல் முழுமையாக பஸ்கள் இயக்கப்படும். இதுவரையில் அரசு பஸ்கள் மட்டுமே புறப்பட்டு சென்றன. இன்று முதல் ஆந்திர மாநில அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் புறப்பட்டு செல்லும். ஆந்திர அரசு பஸ்களுக்கு முன்பதிவு செய்த பயணிகள் தங்களது பயணத்தை மாதவரம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து தொடங்குவார்கள்.

    திருப்பதிக்கு முன்பதிவு செய்த பயணிகளையும் மாதவரத்திற்கு செல்லும் படி அறிவிப்பு வெளியிட்டு வருகிறோம். கோயம்பேட்டில் ஆந்திர மாநில பஸ்கள் நிற்கும் பகுதியில் ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கிறோம்.

    ஆந்திராவிற்கு செல்லக் கூடிய பயணிகள் மாதவரத்திற்கு செல்ல வேண்டும் எனவும், அங்கிருந்துதான் பஸ்கள் புறப்பட்டு செல்லும் எனவும் அறிவிக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாதவரம் ரவுண்டானா பகுதியில் இன்று காலை வாகனம் மோதியதில் புள்ளி மான் பலியானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாதவரம்:

    மாதவரம் ரவுண்டானா பகுதியில் இன்று அதிகாலை புள்ளிமான் ஒன்று தாவிக்குதித்து ஓடியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மானை பிடிக்க முயன்றனர். ஆனால் அது தப்பி ஓடி விட்டது.

    இந்த நிலையில் காலை 7 மணியளவில் அப்பகுதியில் சாலை ஓரத்தில் பலத்த காயங்களுடன் அந்த புள்ளி மான் உயிருக்கு போராடிய படி கிடந்தது. அதனை பொதுமக்கள் மீட்டு மாதவரம் போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்த போது புள்ளிமான் இறந்துவிட்டது.

    சாலையை கடந்து ஓடியபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் பலத்த காயம் அடைந்து இறந்து உள்ளது.

    மாதவரம் பகுதியில் புள்ளிமான் இருப்பதற்கு சாத்தியம் இல்லை. எனவே விலங்குகளை கடத்தும் கும்பல் இந்த புள்ளி மானை ஆந்திரா வனப்பகுதி அல்லது பூண்டி வனப்பகுதியில் இருந்து வாகனத்தில் கடத்தி வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    வாகனத்தில் இருந்து புள்ளிமான் தாவிக்குதித்து தப்பி ஓடியபோது விபத்தில் சிக்கி இறந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    பலியான மானின் உடலை வேளச்சேரி வனத்துறையினர் கைப்பற்றினர். மானை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டும் இதேபோல் 2 புள்ளி மான்கள் வாகனம் மோதி இறந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    மாதவரம் அருகே வாய் தகராறில் லாரி அதிபர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    மாதவரம்:

    மாதவரம் மகாவீர் நகரை சேர்ந்தவர் பாலு (45). லாரி அதிபர். இவரது நண்பர் சிவா. இவர் மாதவரம் அருகேயுள்ள சாஸ்திரி நகரில் சொந்தமாக பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அங்கு அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கொளத்தூர் வஜ்ரவேல் நகரை சேர்ந்த சுரேந்திரன் (30) பெட்ரோல் போட தனது மனைவியுடன் அங்கு வந்தார்.

    அப்போது அவர் குடிபோதையில் இருந்தார். மனைவியை வைத்துக் கொண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டலாமா என பாலுவும், சிவாவும் அவருக்கு அறிவுரை கூறினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சுரேந்திரன் அவர்களுடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் அது கைகலப்பாக மாறியது. அதையடுத்து வீட்டுக்கு சென்ற சுரேந்திரன் மனைவியை இறக்கிவிட்டு 5 பேருடன் மீண்டும் பெட்ரோல் பங்க் வந்தார்.

    அங்கு பாலு மற்றும் சிவாவுடன் மீண்டும் தகராறு செய்து தாக்கினார். அவருடன் வந்தவர்கள் இருவரையும் மரக்கட்டை மற்றும் இரும்பு கம்பியல் தாக்கினர்.

    அதில் படுகாயம் அடைந்த பாலுவை ரெட்டேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பாலு பரிதாபமாக இறந்தார். சிவா சிகிச்சை பெற்று வருகிறார்.

    மாதவரம் போலீசார் கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த அசார் அலி (25) ஜோதீஸ்வரன் (30), அசோக் (20) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். சுரேந்திரன், அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். #Tamilnews
    ×