செய்திகள்
டிடிவி தினகரன்

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

Published On 2019-07-22 10:39 GMT   |   Update On 2019-07-22 10:56 GMT
சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம் இந்திய விண்வெளித்துறையின் புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிற இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் அளப்பரிய பெரும்சாதனையாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 'சந்திரயான்-2’ விண்கலம்  இன்று வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,


சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம் இந்திய விண்வெளித்துறையின் புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிற இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி வனிதா முத்தையா அவர்கள் திட்ட இயக்குனராக இருந்து இந்தச் சாதனையை நிகழ்த்தி இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

அவரோடு சேர்ந்து சந்திரயான்-2 குழுவில் பணியாற்றி 30 சதவிகிதம் பெண்கள் உள்ளிட்ட விஞ்ஞானிகள் அனைவரும் இதன் மூலம் வரலாற்றில் தங்களுடைய பெயரைப் பொறித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறேன்.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News