செய்திகள்
கைது

மணல் கடத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2019-07-19 16:53 GMT   |   Update On 2019-07-19 16:53 GMT
விழுப்புரத்தில் மணல் கடத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விழுப்புரம்:

உளுந்தூர்பேட்டை தாலுகா பேரங்கியூர் குச்சிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிரு‌‌ஷ்ணன் மகன் ஆனந்த் (வயது 23). இவர் மீது திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், தகராறு வழக்கு, கொலை முயற்சி மற்றும் மணல் கடத்தல் வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரத்திற்கு முன்பு மணல் கடத்தல் வழக்கு தொடர்பாக ஆனந்தை, திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் மணல் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் ஆனந்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து ஆனந்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News