செய்திகள்
பெரியபாளையத்தில் குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
பெரியபாளையத்தில் குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள வேலைப்பார்க்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரன்.கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று பெரிய பாளையம் நேதாஜி நகரில் உள்ள பெருமாள் கோவில் குளத்தில் இறங்கி கை, கால் கழுவ முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி குளத்தில் விழுந்தார். குளத்தில் சேறும், சகதியுமாக இருந்ததால் அதில் சிக்கிக் கங்காதரன் பலியானார்.