செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டியில் இன்று காமராஜர் சிலைக்கு மாலைஅணிவித்த பிறகு தினகரன் தொண்டர்களை பார்த்து கையசைத்த காட்சி

சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டோம்- தினகரன் அறிவிப்பு

Published On 2019-07-15 07:49 GMT   |   Update On 2019-07-15 07:49 GMT
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் போட்டியிட மாட்டோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி:

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் இன்று காலை மாலை அணிவித்தார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் நேரத்தில் மக்கள் மனநிலையை அறிந்து மக்களுக்கு எதிரான திட்டங்களை அரசு செயல்படுத்தாது என அ.தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டது.


தற்போது சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்து 9 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற பிறகு அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும் என்பதால் 8 வழிச்சாலை போன்ற திட்டங்களை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்கிறார். இதற்கு மக்கள் நிச்சயம் முடிவு கட்டுவார்கள். எடப்பாடி பழனிசாமி எதை வேண்டுமானாலும் பேசுவார். ஏனென்றால் அவர் முதல்-அமைச்சராக இருக்கிறார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்யும் வேலையில் தீவிரமாக உள்ளோம். இதனால்தான் வேலூர் எம்.பி. தொகுதியில் போட்டியிடவில்லை. விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம்.

தற்போது தேர்தலில் போட்டியிட்டால் 3 தொகுதிகளுக்கும் 3 சின்னம் வழங்குவார்கள் என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சியை பதிவு செய்த பிறகு ஒரே சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் வழங்கும் போது தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News