செய்திகள்
கொள்ளை

திருவள்ளூரில் கத்தியை காட்டி மிரட்டி மளிகை கடையில் கொள்ளை

Published On 2019-07-13 07:05 GMT   |   Update On 2019-07-13 07:05 GMT
திருவள்ளூரில் கத்தியை காட்டி மிரட்டி மளிகை கடையில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முரளி (35). அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று வாலிபர் ஒருவர் சென்று சிகரெட் வாங்கினார்.

முரளி சிகரெட்டுக்கு பணம் கேட்டார். அந்த வாலிபர் தர மறுத்து கத்தியை காட்டி மிரட்டி கல்லா பெட்டியில் இருந்த ரூ.1500-ஐ கொள்ளையடித்து சென்றார்.

உடனே முரளி திருடன் திருடன் கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை சுற்றிவளைத்து பிடித்து திருவள்ளூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் செங்குன்றம் பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன்(43) என்பது தெரியவந்தது அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News