செய்திகள்
மரணம்

ரெயில் மோதி மூதாட்டி பலி

Published On 2019-07-08 11:19 GMT   |   Update On 2019-07-08 11:19 GMT
ரெயில் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாலாபேட்டை:

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா லாலாபேட்டையை சேர்ந்தவர் குழுமாயி (வயது 70). இவர் நேற்று மதியம் அவரது தோட்டத்திற்கு செல்வதற்காக ரெயில்வே தண்டவாளத்தை கடந்தார். அப்போது திருச்சியிலிருந்து பாலக்காட்டிற்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே குழுமாயி உடல் துண்டாகி பலியானார். இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கரூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கரூர் உதவி ஆய்வாளர் விஜய்சங்கர் தலைமையில் லாலாப்பேட்டை போலீசார் வந்து குழுமாயியின் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோ தனைக்கான அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News