செய்திகள்
வத்தலக்குண்டுவில் என்ஜினீயரிங் பட்டதாரி விஷம் குடித்து தற்கொலை
வத்தலக்குண்டுவில் என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகில் உள்ள பொன்னம்பட்டியை சேர்ந்தவர் போத்திராஜ். கம்பி கட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். முதல் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். 2-வது மகன் பாபுகுமார் (வயது26) என்ஜினீயரிங் முடித்துள்ளார். வேலை கிடைக்காத காரணத்தால் நிலக்கோட்டையில் உள்ள உரக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிய பாபுகுமார் வத்தலக்குண்டு மெயின்ரோடு தனியார் பாலிடெக்னிக் அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.