செய்திகள்
நிலுவை சம்பளம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் தொடர் தர்ணா
நிலுவை சம்பளம் வழங்கக்கோரி புதுவை பாசிக் ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவை பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) சார்பில் பாசிக் தலைமை அலுவலகம் முன்பு இன்று தொடர் தர்ணா போராட்டம் தொடங்கியது.
சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்தார். செயல் தலைவர் அபிஷேகம், செயல் தலைவர் தினேஷ் பொன்னையா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
துணை செயலாளர்கள் மகேந்திரன், கோவிந்தராஜு, மணிகண்ணன், மூர்த்தி, விநாயகம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
50 மாத நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். லாபகரமான தொழில்களை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.