செய்திகள்
மாநகராட்சி வளாகத்தில் வாலிபர் அடித்து கொலையா?
மாநகராட்சி வளாகத்தில் வாலிபர் அடித்து கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் சட்டை எதுவும் காணப்படவில்லை. அவரது உடலை கைப்பற்றி பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிணமாக கிடந்த வாலிபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடக்கிறது.