செய்திகள்

திருவாரூரில் 2 பெண்கள் திடீர் மாயம்- போலீசார் விசாரணை

Published On 2019-06-24 09:54 GMT   |   Update On 2019-06-24 09:54 GMT
திருவாரூரில் 2 பெண்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:

திருவாரூர் குமரகோவில் தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகள் பவித்ரா பிரபா (வயது 28). இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒருபெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து வந்த பவித்ரா பிரபா தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அவர் ஒரு திருமண விழாவுக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த குருமூர்த்தி, திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப்பதிவு மாயமான பவித்திர பிரபாவையும், அவரது மகளையும் தேடி வருகின்றனர்.

திருவாரூர் புதுத்தெருவை சேர்ந்தவர் சபரீசன். இவர் ஆந்திராவில் வேலை பார்த்தபோது அங்கு வசித்த புர்சித் பேகம் (வயது 30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் திருவாரூர் புதுத்தெருவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் புர்சித் பேகம், திடீரென மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சபரீசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளியிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில் திருவாரூர் டவுன் இன்ஸ்பெக்டர் அன்பரசன் வழக்குப்பதிவு செய்து மாயமான புர்சித் பேகத்தை தேடி வருகிறார்.
Tags:    

Similar News