செய்திகள்
திண்டுக்கல் அருகே வங்கி மேலாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
திண்டுக்கல் அருகே வங்கி மேலாளர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பின்புறம் உள்ள விஜய மாதாநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 41). இவர் பொன்னகரத்தில் மருந்து கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி ஜெயந்தி (36) இவர் நத்தம் கொட்டாம்பட்டியில் பாண்டியன் கிராம வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜனனி என்ற மகளும் கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.
இந்தநிலையில் வழக்கம் போல் நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, கணவன் மனைவி இருவரும் பணிக்குச் சென்றனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். மாலை சிவக்குமார் அவரது மனைவி ஜெயந்தியுடன் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவின் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் இருந்த 4 பவுன் நகை, 15 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் சிவக்குமார் புகார் செய்தார். அதன்பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகு பாண்டி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசையை காட்டியது தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பின்புறம் உள்ள விஜய மாதாநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 41). இவர் பொன்னகரத்தில் மருந்து கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி ஜெயந்தி (36) இவர் நத்தம் கொட்டாம்பட்டியில் பாண்டியன் கிராம வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜனனி என்ற மகளும் கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.
இந்தநிலையில் வழக்கம் போல் நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, கணவன் மனைவி இருவரும் பணிக்குச் சென்றனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். மாலை சிவக்குமார் அவரது மனைவி ஜெயந்தியுடன் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவின் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் இருந்த 4 பவுன் நகை, 15 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் சிவக்குமார் புகார் செய்தார். அதன்பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகு பாண்டி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசையை காட்டியது தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.