செய்திகள்
வத்தலக்குண்டு அருகே நிலத்தகராறில் அண்ணனை கொன்ற தம்பி
வத்தலக்குண்டு அருகே நிலத்தகராறில் அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விறுவீடு வடிவேல் புரத்தைச் சேர்ந்தவர் முத்தையா (வயது 50). விவசாயி. இவருக்கும் இவரது தம்பி பெருமாள் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இன்று காலை தோட்டத்துக்கு செல்வதற்காக முத்தையா சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அவரை வழி மறித்த பெருமாள் நிலத்தை தனக்கு தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதற்கு முத்தையா மறுக்கவே ஆத்திரமடைந்த பெருமாள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்தையாவை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்தையா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் விறுவீடு சப்-இன்ஸ்பெக்டர் பவுன்ராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விறுவீடு வடிவேல் புரத்தைச் சேர்ந்தவர் முத்தையா (வயது 50). விவசாயி. இவருக்கும் இவரது தம்பி பெருமாள் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இன்று காலை தோட்டத்துக்கு செல்வதற்காக முத்தையா சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அவரை வழி மறித்த பெருமாள் நிலத்தை தனக்கு தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதற்கு முத்தையா மறுக்கவே ஆத்திரமடைந்த பெருமாள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்தையாவை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்தையா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் விறுவீடு சப்-இன்ஸ்பெக்டர் பவுன்ராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.