செய்திகள்

சிங்காரப்பேட்டை அருகே கள்ளச்சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2019-06-19 16:33 GMT   |   Update On 2019-06-19 16:33 GMT
சிங்காரப்பேட்டை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கள்ளச்சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை அடுத்த கோவிந்தபுரம் அருகே உள்ள கரசனூர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக சிங்காரப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த நெல்லிப்பட்டியைச் சேர்ந்த வெள்ளச்சி (வயது50), சிங்காரப்பேட்டையை அடுத்த கெரகனூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (52) ஆகிய 2 பேரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.     

கைது செய்யப்பட்ட 2 பேரையும் ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வெள்ளச்சியை கிருஷ்ணகிரி மகளிர் சிறையிலும், ஆனந்தனை ஊத்தங்கரை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News