செய்திகள்

பென்னாகரம் அருகே விஷப்பூச்சி கடித்த முதியவர் பலி

Published On 2019-06-19 16:14 GMT   |   Update On 2019-06-19 16:14 GMT
பென்னாகரம் அருகே விஷப்பூச்சி கடித்த முதியவர் ஆபத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள சின்னபெரமனூர் அடுத்த தருமந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரி (வயது 60). இவருக்கு கடந்த 16-ந் தேதி வயிறு பெரியதாகி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மாரியின் உறங்கினார்கள் மாரியை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

விஷப்பூச்சி மாரியை கடித்து இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News