செய்திகள்
மனைவியின் தங்கையிடம் ஆபாசமாக நடக்க முயற்சி- தொழிலாளி கைது
காட்டேரிக்குப்பத்தில் மனைவியின் தங்கையிடம் ஆபாசமாக நடக்க முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனூர்:
காட்டேரிக்குப்பம் ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்தவர் கவுரி (வயது 35). இவருடைய அக்காள் வரலட்சுமி, அவருடைய கணவர் பூபாலன் (வயது 43), தொழிலாளி. இவர்களும் அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று கவுரி கடைத்தெருவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து சென்ற பூபாலன் ஆபாசமாக பேசி கவுரியிடம் தவறாக நடக்க முயன்றார். இதை கவுரி எதிர்த்ததால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
இதுசம்பந்தமாக கவுரி காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபாலனை கைது செய்தனர்.