செய்திகள்

சங்கரன்கோவிலில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

Published On 2019-06-19 07:55 GMT   |   Update On 2019-06-19 07:55 GMT
சங்கரன்கோவிலில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் புதுமனை தெருவை சேர்ந்தவர் வேல்ராஜ் (வயது 48). தொழிலாளி. இவரது மகள் சங்கரன்கோவிலில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவரை அம்பேத்கார் 1-ம் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் மனோ (24) என்பவர் அடிக்கடி பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த வேல்ராஜ் தனது வீட்டை அந்த பகுதியில் இருந்து காலி செய்து பாடப்பிள்ளையார் கோவில் தெரு அருகே மாறி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் அந்த பகுதிக்கு மனோ வந்துள்ளார். அதை வேல்ராஜ் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோ வேல்ராஜை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்து விட்டு சென்றுவிட்டார். இது குறித்து வேல்ராஜ் சங்கரன்கோவில் டவுண் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோவை கைது செய்தனர்.

Tags:    

Similar News