செய்திகள்

சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் நில அளவையர் பலி

Published On 2019-06-17 15:20 GMT   |   Update On 2019-06-17 15:20 GMT
சூளகிரி அருகே பெயர் பலகை மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நில அளவையர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சூளகிரி:

தருமபுரியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது34). இவர் தனியார் நிலஅளவையராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் ஓசூரில் இருந்து தருமபுரி நோக்கி வந்து கொண்டிருந்தார். 

அப்போது சூளகிரி அருகே சின்னாறு பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அங்குள்ள பெயர் பலகை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News