செய்திகள்

டி.வி. பார்த்ததை கண்டித்ததால் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2019-06-16 12:51 GMT   |   Update On 2019-06-16 12:51 GMT
டி.வி. பார்த்ததை கண்டித்ததால் சட்டக் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகேயுள்ள சோழத்தூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி பவித்ரா (வயது 23). இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. பவித்ரா சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் பவித்ரா அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டு வேலைகளை செய்யுமாறு பவித்ராவின் தாயார் கூறியிருக்கிறார்.

ஆனால் பவித்ரா தாயார் கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாமல் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். இதனை கண்டித்ததால் மனவேதனையடைந்த பவித்ரா எலி மருந்தை குடித்து விட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பவித்ரா பரிதாபமாக இறந்தார். திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News