செய்திகள்

நெல்லை அருகே விஷம் குடித்து விவசாயி- பெண் தற்கொலை

Published On 2019-06-15 12:27 GMT   |   Update On 2019-06-15 12:27 GMT
நெல்லை அருகே பல்வேறு சம்பவங்களில் விவசாயி- பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த மேலபிள்ளையார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது47). இவர் அடிக்கடி மது குடித்ததால் வயிற்று வலி ஏற்பட்டது. இது தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நாராயணன் நேற்று விஷம் குடித்தார்.

அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்றிரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

பாளை, கக்கன்நகரை சேர்ந்தவர் ஜெபராஜ். இவரது மனைவி முத்து லட்சுமி (38). ஜெபராஜ் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் அவரது மனைவி முத்து லட்சுமி கணவரை சத்தம் போட்டார். ஆனால் ஜெபராஜ் தினமும் மது குடித்து விட்டு தான் வருவேன் என்று கூறி மனைவியை தாக்கினாராம். இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி கடந்த 11-ந்தேதி விஷம் குடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News