செய்திகள்

வில்லியனூர் அருகே கழிவுநீர் வாய்க்கால் தகராறில் வாலிபர் மீது தாக்குதல்

Published On 2019-06-15 10:12 GMT   |   Update On 2019-06-15 10:12 GMT
வில்லியனூரில் கழிவுநீர் வாய்க்கால் தகராறில் வாலிபரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய அண்ணன்- தம்பி உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் தேவா (வயது 25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது.

திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால் தேவா அடிக்கடி மஞ்சு வீட்டுக்கு சென்று அவருடன் பேசி வந்தார். இது, எதிர்வீட்டை சேர்ந்த அண்ணன்- தம்பி யான பிரசாந்த், பிரதீஷ் ஆகியோருக்கு பிடிக்க வில்லை. தேவாவை அவர் கள் எதிரியாக பாவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் தேவா மஞ்சு வீட்டுக்கு சென்றார். அப்போது மஞ்சு வீட்டில் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு இருந்த தால் அதனை தேவா சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

இதற்கு பிரசாந்தின் தாய் பொறையாள், சித்தி மீனாட்சி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாந்த், பிரதீஷ் மற்றும் இவர்களது தாய் பொறையாள், சித்தி மீனாட்சி ஆகிய 4 பேரும் சேர்ந்து தேவாவை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் தேவாவுக்கு கையில் முறிவு ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசாந்த், பிரதீஷ் உள்பட 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News