செய்திகள்
திருச்சி அருகே போலி மது ஆலை கண்டுபிடிப்பு- 4 பேர் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே போலி மது ஆலை தொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நல்லாம்பிள்ளை அருகே உள்ள வெள்ளிவாடி பகுதியில் 3 பேர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் மது தயாரித்து விற்பனை செய்வதாக மணப்பாறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது போலி மது தயாரித்து அதனை பாட்டிலில் அடைத்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில் மற்றும் மது நிரப்பி வைக்க பயன்படும் பேரல், கேன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அதனை நடத்திய புதுக்கோட்டை மாவட்டம், சூரக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் ( வயது43) பல்லவராயம்பத்தையை சேர்ந்த அறிவழகன் (40), அண்ணாமலை (28) மற்றும் வீட்டை வாடகைக்கு விட்ட மருது ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நல்லாம்பிள்ளை அருகே உள்ள வெள்ளிவாடி பகுதியில் 3 பேர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் மது தயாரித்து விற்பனை செய்வதாக மணப்பாறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது போலி மது தயாரித்து அதனை பாட்டிலில் அடைத்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில் மற்றும் மது நிரப்பி வைக்க பயன்படும் பேரல், கேன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அதனை நடத்திய புதுக்கோட்டை மாவட்டம், சூரக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் ( வயது43) பல்லவராயம்பத்தையை சேர்ந்த அறிவழகன் (40), அண்ணாமலை (28) மற்றும் வீட்டை வாடகைக்கு விட்ட மருது ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.