செய்திகள்

திருவள்ளூர் அருகே விளக்கு தீ உடலில் பற்றி சிறுமி பலி

Published On 2019-06-15 06:59 GMT   |   Update On 2019-06-15 06:59 GMT
திருவள்ளூர் அருகே விளக்கு தீ உடலில் பற்றி சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த காக்களூர் நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் கமலக் கண்ணன். கூலி தொழிலாளி. இவரது மகள் ரித்திகா (6) இவர் காக்களூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார்.

நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ரித்திகா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது வீட்டு வாசலில் ஏற்றி வைத்த தீபம் ரித்திகாவின் உடையில் தீப்பற்றியது.

ரித்திகாவின் அலறல் சத்தம் கேட்டு உடல் கருகிய அவளை அக்கம் பக்கத்தினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரித்திகா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News