செய்திகள்

மாம்பலம் பகுதியில் மிளகாய் பொடி தூவி நவரத்தின கற்களை பறிக்க முயன்றவர் கைது

Published On 2019-06-15 06:48 GMT   |   Update On 2019-06-15 06:48 GMT
மாம்பலம் பகுதியில் மிளகாய் பொடி தூவி நவரத்தின கற்களை பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

தேனி மாவட்டம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். நவரத்தின கற்கள் வியாபாரி. இவர் சென்னை வந்து மாம்பலம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நண்பர்களுடன் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு பாஸ்கரன் என்பவர் நவரத்தின கற்களை வாங்குவது போல் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் மீது தூவி விட்டு நவரத்தின கற்களை எடுத்துச் செல்ல முயன்றார். சுதாரித்துக் கொண்ட செல்வம், நண்பர்கள் உதவியுடன் பாஸ்கரை மடக்கி பிடித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட பாஸ்கரன் மதுரை மேலூரை சேர்ந்தவர் என்பதும், அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News