செய்திகள்
திருப்பூர் அருகே திருமண நாளில் புதுமாப்பிள்ளை மாயம்
திருப்பூர் அருகே திருமணம் நடைபெற இருந்த நாளில் புதுமாப்பிள்ளை மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் முதலிப்பாளையம் அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் முகமது முஸ்தபா (வயது 27). பனியன் தொழிலாளி. இவருக்கும் நல்லிக்கவுண்டன் நகரை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அதன்படி நேற்று இரவு கோம்பைத்தோட்டம் என்ற இடத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இருவீட்டாரும் திருமண ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்தனர்.
திருமண விருந்துக்காக இறைச்சி வாங்க நேற்று காலை முகமது முஸ்தபா மற்றும் அவரது 2 நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர். வெகுநேரமாகியும் திரும்பவில்லை.
சந்தேகம் அடைந்த பெற்றோர் முகமது முஸ்தபாவுக்கு போன் செய்தனர். அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடன் சென்ற 2 நண்பர்களுக்கு போன் செய்து முகமது முஸ்தபா குறித்து கேட்டனர். இறைச்சி வாங்கியபோது சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் என்று மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றார் என்று கூறினர்.
இதனையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுமாப்பிள்ளையை தேடினர். ஆனால் அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசாரும் விடிய விடிய மாயமான புதுமாப்பிள்ளையை தேடினர். ஆனால் முகமது முஸ்தபாவை கண்டு பிடிக்க முடியவில்லை.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் முதலிப்பாளையம் அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் முகமது முஸ்தபா (வயது 27). பனியன் தொழிலாளி. இவருக்கும் நல்லிக்கவுண்டன் நகரை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அதன்படி நேற்று இரவு கோம்பைத்தோட்டம் என்ற இடத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இருவீட்டாரும் திருமண ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்தனர்.
திருமண விருந்துக்காக இறைச்சி வாங்க நேற்று காலை முகமது முஸ்தபா மற்றும் அவரது 2 நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர். வெகுநேரமாகியும் திரும்பவில்லை.
சந்தேகம் அடைந்த பெற்றோர் முகமது முஸ்தபாவுக்கு போன் செய்தனர். அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடன் சென்ற 2 நண்பர்களுக்கு போன் செய்து முகமது முஸ்தபா குறித்து கேட்டனர். இறைச்சி வாங்கியபோது சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் என்று மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றார் என்று கூறினர்.
இதனையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுமாப்பிள்ளையை தேடினர். ஆனால் அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசாரும் விடிய விடிய மாயமான புதுமாப்பிள்ளையை தேடினர். ஆனால் முகமது முஸ்தபாவை கண்டு பிடிக்க முடியவில்லை.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.