செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே பஸ்சுக்கு காத்திருந்தவர் கார் மோதி பலி

Published On 2019-06-14 11:08 GMT   |   Update On 2019-06-14 11:08 GMT
ஒட்டன்சத்திரம் அருகே லக்கயன் கோட்டையில் பஸ்சுக்காக காத்திருந்தவர்மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஒட்டன்சத்திரம்:

லக்கயங்கோட்டை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (வயது 55) இவரும் காந்தி நகரை சேர்ந்த குணசேகரன் (64) என்பவரும் பேருந்துக்காககாத்து இருந்தனர்.

திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற கார் இவர்கள் மீது மோதியதில் ஆறுமுகசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். குணசேகரன் இரு கால்களும் உடைந்த நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து காரை ஓட்டி வந்த காளாஞ்சி பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மகன் சிவனேசன் (34) மற்றும் காரில் உடன் வந்த செல்லமுத்து என்பவர் மீதும் வழக்குப் பதிந்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News