செய்திகள்

குடவாசல் அருகே மயங்கி விழுந்து தொழிலாளி பலி- போலீசார் விசாரணை

Published On 2019-06-13 14:38 GMT   |   Update On 2019-06-13 14:38 GMT
குடவாசல் அருகே மது குடித்த தொழிலாளி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்த சேங்காளிபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 35) தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாய்க்காலில் திடீரென மயங்கி விழுந்து கிடந்தார். சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். 

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து குடவாசல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தக்கு விரைந்து வந்து பிரேதத்தை பார்வையிட்டனர். இதையடுத்து ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து அவரது மனைவி சீதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ராஜேந்திரனுக்கு வலிப்பு நோய் உள்ளது என்று தெரிய வந்தது. இதனால் வலிப்பு ஏற்பட்டு அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News