செய்திகள்

மயிலாப்பூரில் ஐசரி கணேஷ் தங்கை வீட்டில் ரூ.15 லட்சம் நகை கொள்ளை

Published On 2019-06-13 09:02 GMT   |   Update On 2019-06-13 09:02 GMT
சென்னை மயிலாப்பூரில் நடிகர் ஐசரி கணேஷனின் தங்கை வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை போனது குறித்து வேலைக்கார பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

நடிகர் ஐசரி கணேசின் தங்கை மகாலட்சுமி. இவர் மயிலாப்பூர் டாக்டர் ரங்கா சாலையில் வசித்து வருகிறார்.

இவரது வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் மாயமாகி இருந்தது. இதுதொடர்பாக வீட்டில் வேலை செய்து வரும் சுதா என்ற பெண் மீது புகார் செய்யப்பட்டது.

மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் கடந்த 15 ஆண்டுகளாக சுதா வேலை செய்து வந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக சுதாவிடமும் அவரது கணவர் அன்புவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். வீட்டில் வேலை செய்த சுதா சிறிது சிறிதாக நகையை திருடி பதுக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Tags:    

Similar News