செய்திகள்

செல்போனை பறித்தபோது வாலிபரை மோட்டார்சைக்கிளோடு இழுத்து சென்ற 3 பேர் கைது

Published On 2019-06-11 10:34 GMT   |   Update On 2019-06-11 10:33 GMT
தேனாம்பேட்டை அருகே செல்போனை பறித்து சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

தேனாம்பேட்டை டி.டி.கே. சாலையில் கடந்த 2-ந் தேதி சரவணன் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்தனர்.

உடனே சரவணன் ஓடிச் சென்று மோட்டார்சைக்கிளின் பின்பகுதியை பிடித்துக் கொண்டார். அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியதால் சரவணன் ரோட்டில் தரதரவென்று சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார்.

அதன்பின் அந்த வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர். காயம் அடைந்த சரவணன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று விட்டு தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக மைலாப்பூர் பி.என்.கே. கார்டன் பகுதியைச் சேர்ந்த கிஷோர், பழனி, மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் தேனாம்பேட்டையில் ஒரு வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிளை திருடிவிட்டு சரவணனிடம் செல்போனை பறித்து சென்றது தெரிய வந்தது. இவர்கள் வேளச்சேரி, தேனாம்பேட்டை, அபிராமபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் 8 பேரிடம் செல்போனை பறித்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News