செய்திகள்

பாட்டி வீட்டுக்கு சென்ற மாணவி மாயம்- போலீசில் தாய் புகார்

Published On 2019-06-10 11:54 GMT   |   Update On 2019-06-10 11:54 GMT
வெள்ளகோவில் அருகே பாட்டி வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்தூர்:

வெள்ளகோவில் அருகே உள்ள கம்புளியாம்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் திவ்யா (வயது 17). திவ்யா 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இளம்பெண் திவ்யா கல்லமடையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

பெற்றோரும், உறவினர்களும் அவரை பல இடங்களில் தேடியும் திவ்யாவை காணவில்லை.

இது குறித்து திவ்யாவின் தாயார் ராணி வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். மாயமான தனது மகளை கண்டு பிடித்து மீட்டு தரும் படி கேட்டுக்கொண்டுள்ளார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி மாயமான திவ்யாவை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News