செய்திகள்

குரும்பூர் அருகே பனை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி

Published On 2019-06-09 14:30 GMT   |   Update On 2019-06-09 16:16 GMT
குரும்பூர் அருகே பனை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
குரும்பூர்:

பாளை அருகே உள்ள கொங்கந்தான் பாறை அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் சவுந்தர் மகன் செல்வம்(வயது 21). மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துவேல் மகன் சரவணன். பாளையை சேர்ந்தவர் மணி மகன் இசக்கி முத்து(26). இவர்களில் செல்வமும், இசக்கிமுத்துவும் சென்டரிங் வேலை செய்து வந்தனர். 

இந்நிலையில் நேற்று மாலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக 3 பேரும் ஒரே பைக்கில் சென்றனர். இரவு 7 மணியளவில் குரும்பூரை அடுத்த துறையூர் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்தில் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில்  செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சரவணன், இசக்கிமுத்து இருவரும் படுகாயத்துடன்உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். 

தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வம் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து குரும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News